...... வள்இதழ்,
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தன்கயக்குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உளந்துழ், கூவிளம்,
எரிபுரை, எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவளம், வாகை, வான் பூங்குடசம்,
எருவை, செருவிளை, மணிபூங், கருவிளை,
பயனி, வானி, பல் இனர்குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இனர்க் காயா,
விரிமலர், ஆவிரை, வேரல், சூரல்,
சூரிகிப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கவிமா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தாளம், முள்தாட் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல் கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிகுவைக்கள் கமழ் நெய்தல்,
பாங்கர் மராஅம், பல் பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்;கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாராம்,
தும்மை, துழாஅய், சுடர்பூந்தோன்றி,
நந்தி, நறவம், நறும், புன்னாகம்,
பாரம், பீரம் பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்...
உங்களுக்கு எத்தனை பூக்கள் தெரியும்?
July 06, 2007
கையுரச உடையும்கண்ணாடி
வளையலாய்கனவுகள்...
இருப்பினும் நம்பிக்கை தேடும்
மனசைச் செய்...
---
நீ என் நினைவில்
வந்து போகும்
சித்திரம் இல்லை
என் இதயத்தில்
செதுக்கிய சிற்பம்
----
உன் நினைவாக
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனால்
உன் நினைவைத்
தவிர என்னிடம்
வேறொன்றுமே இல்லை
---
உன்னுடன் பேசுவதான
நிகழ்வுகளில்
உன் பிம்பம் மனதில்
தங்குவதில்லை
உன்னுடன் பேசாத
நிகழ்வுகளில்
உன் பிம்பம் தவிர
வேறெதுவும் மனதில்
தங்குவதில்லை
---
புயல் காற்று அடிக்கும்
பொழுதெல்லாம் மரங்கள்
திடுக்கிடுகின்றன
ஆனாலும் கேட்டதில்லை
ஒருபோதும் ஏன் என்று...
---
நீ இலையாக வாழ்ந்தால்
உதிர்ந்து சருகாகிப் போகிறாய்
நீ கிளையாக வாழ்ந்தால்
சில இலைகளை உற்பத்தி செய்கிறாய்
நீ மரமாக வாழ்ந்தால்
கிளைகளையும் இலைகளையும் உற்பத்தி செய்கிறாய்
நீ வேராக வாழ்ந்தாலோ
அனைத்தும் நீயே...
---
வளையலாய்கனவுகள்...
இருப்பினும் நம்பிக்கை தேடும்
மனசைச் செய்...
---
நீ என் நினைவில்
வந்து போகும்
சித்திரம் இல்லை
என் இதயத்தில்
செதுக்கிய சிற்பம்
----
உன் நினைவாக
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனால்
உன் நினைவைத்
தவிர என்னிடம்
வேறொன்றுமே இல்லை
---
உன்னுடன் பேசுவதான
நிகழ்வுகளில்
உன் பிம்பம் மனதில்
தங்குவதில்லை
உன்னுடன் பேசாத
நிகழ்வுகளில்
உன் பிம்பம் தவிர
வேறெதுவும் மனதில்
தங்குவதில்லை
---
புயல் காற்று அடிக்கும்
பொழுதெல்லாம் மரங்கள்
திடுக்கிடுகின்றன
ஆனாலும் கேட்டதில்லை
ஒருபோதும் ஏன் என்று...
---
நீ இலையாக வாழ்ந்தால்
உதிர்ந்து சருகாகிப் போகிறாய்
நீ கிளையாக வாழ்ந்தால்
சில இலைகளை உற்பத்தி செய்கிறாய்
நீ மரமாக வாழ்ந்தால்
கிளைகளையும் இலைகளையும் உற்பத்தி செய்கிறாய்
நீ வேராக வாழ்ந்தாலோ
அனைத்தும் நீயே...
---
Subscribe to:
Posts (Atom)